About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/05/27

குமுறல்கள்:
my first disclaimer : i am not jealous with anybody ,nor  am  i  a  cynic .
யார் மீதும் பொறாமையோ , மற்ற ego எதுவுமோ இல்லை.
சௌந்தர்யாவை  மனமார பாராட்டுகிறேன்.
ஆனால் சௌந்தர்யாவை ஓ ஓ ஓவராக பாராட்டும் பலரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஒருவர் சொல்கிறார்.''இந்த பெண்ணுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது என்றே தெரியவில்லை''
எத்தனை இளைஞர்களுக்கு இந்த மாதிரி கனவு இருக்கிறது தெரியுமா? அவர்களிடம் இந்த 'ரஜினி' என்ற மந்திர சொல்லையும், 150 கோடியும் கொடுத்திருந்தால் அவர்களும் சாதித்திருப்பார்கள்.இந்த படத்தை பார்க்கும் எத்தனை பேர் ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள் தெரியுமா?
*******
Green ink :
என் வீட்டிற்கு ஒருவர் வந்திருந்தார். எழுத பேனா கேட்டேன் .''இது பச்சை மை'' என்றார். அதிர்ந்து ''அதிர்ந்து'' விட்டேன்.
ஏன் தெரியுமா?
அவர் 8ம் வகுப்பு கூட தேறாதவர்.
உள்ளாட்சி ,ஒரு கிராம பஞ்சாயத்தில் ஏதோ ஒரு பதவியாம்.
''G '' போட்ட வண்டியில் வந்தார்.
கொடுமையே !!!!!
எத்தனை மென்பொருளை வடிவமைத்து நாட்டின் பொருளாதாரத்தையே  உயர்த்தும் பொறியாளர்கள் எல்லாம் கனவு கூட காண முடியாது இப்படி ஒரு பச்சை மை, G வண்டி.
நான் பணியில் சேர்ந்த போது பச்சை மையில் கையெழுத்திடும்  உரிமை இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு AEE  போன்ற பலருக்கும் அந்த உரிமை மறுக்கப் பட்டது.அனல்மின் நிலைய கட்டுமானத்தில் பணியின்போது  எத்தனை சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் .tunnel ,chimney போன்ற கட்டுமானங்கள் எவ்வளவு அறிவும் ,அர்பணிப்பும் தேவைப்படும் விஷயம் தெரியுமா?.அவர்களுக்கெல்லாம் பச்சை மை கிடையாது.
யாரை குறை சொல்வது?
*****
+1 பாடங்கள்;
மாநகராட்சி செய்த முடிவு:
மாணவர்களின்  தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இனி +1 பாடங்களை நடத்தாமல் +1 லும் +2 பாடங்களையே நடத்த வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.
எல்லா தனியார் பள்ளிகளிலும்  இதைத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இதன் விளைவு என்ன தெரியுமா?
+1 கணிதம்தான் மிக முக்கியமானது. B .E சேர்ந்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் மாணவர்கள் இருப்பார்கள். இந்த M 3 என்ற ஒன்று இருக்கிறது பாருங்கள். அது அவர்கள் சேரும் எந்த வேலைக்கும் பயன்படுவதில்லை.ஆனால் அந்த M 3 யில் தேறி விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.பட்டம் பெற்றுவிடுவார்கள்.ஆனால் ஒரு 30% பேர்தான் தேறுவார்கள். இந்த அடியில் துவண்டு விடும் மாணவர்கள் அதிர்ச்சியில் அடுத்து அடுத்து arrears என்று ,வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள்.
என் மாணவர்கள் பலர் இப்படி ஆகியுள்ளனர்.ஒரு 10 கணக்குகளை மட்டுமே மனப்பாடம் செய்ய வைத்து (அதுவும் ஒரு vocational பிரிவு )மாணவன் 200க்கு 200 பெற வைத்து கிண்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம்.ஆனால்....அதனால் +1 கணிதம் மிக மிக முக்கியம்.
கார்த்திக் அம்மா

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

புரிந்து கொண்டவர்கள் தப்பித்தார்கள்...