About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/12/30

ஒற்றை பிராமணன் :
இன்று சங்கரா டி .வி யில் ஒரு ஜோதிட நிகழ்ச்சி பார்த்தேன்.ஒரு பிரபல ஜோதிடர்.
அவரிடம் பூனை குறுக்கே போதல் போன்ற சகுனங்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ''ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் ஒற்றையாக எதிரில் வந்தால் போகும் காரியம் வெற்றி பெறாது என்ற சகுனத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்.
Disclaimer :
நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை.
பெரிய ஜோதிடரும் இல்லை.
ஒரு L K G அளவில்  தெரியும்.அந்த அளவில் இந்த
ஒற்றை பிராமணன் என்பது குருவை குறிப்பது.ஒரு ஜாதகத்தில் எந்த கட்டமாக இருந்தாலும் சரி.
குரு  தனித்து ( வேறு எந்த கிரகத்துடனும் சேராமல் )நின்றால் நல்ல பலன் இல்லை .
அதைத்தான் ஒற்றை பிராமணன் ஆகாது என்றார்கள்.
நம்  மக்கள்தான் super brain ஆயிற்றே.
கதை செய்து கயிறு திரித்து விட்டார்கள்.
பாவம் அவர்கள் .தனியே வந்தால் எதிரில் வருபவர்களை கண்டு தயங்குவார்கள்.
ஆனால் காலம் மாறி விட்டது.இப்போதைய தலைமுறைக்கு இந்த சகுனங்கள் என்ற ஒன்று பற்றி தெரியுமா என்பதே சந்தேகம்தான்
மறக்க விடாமல் கொள்ளியை எரிய விடுவோம் என்பது சரியா?
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

No comments: