About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/12/11

PWD officers .IAS officers:
இது தற்பெருமை அல்ல.என் சுய புராணமும் அல்ல. இது பற்றி முன்பே எழுதியுள்ளேன்.
1990  என நினைக்கிறேன்.நான் ஆசிரியையாக பணியாற்றிய போது நடந்த நிகழ்வு :
+2 தேர்வு.
தனித் தேர்வர்கள் 120 பேர் .அவர்களுக்கு ஹால் டிக்கட் வரவில்லை.
இது எதுவும் எனக்கு தெரியாது. வழக்கம் போல் பள்ளிக்கு வந்த என்னை தலைமை ஆசிரியர் அழைத்து கையில் ஒரு file  கொடுத்து நீங்கள்தான் in charge .இந்த தேர்வை நடத்துங்கள் என்றார்.
அதில் என்ன பிரச்சினை ,ஆபத்தா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.அந்த இடத்திற்கு சென்றபோது 120 பேரும் ஒரே கூச்சல்.'' எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை.''
எப்படி தேர்வு  எழுத அனுமதிப்பது?
அனுமதிக்காமலும் இருக்க முடியாது.
இதையெல்லாம் என் சீனியர்சுடன் விவாதித்திருக்கிறார் என் தலைமை ஆசிரியர்.(நான்தான் most junior ).
அவர்களெல்லாம் பிளான் செய்து என் தலையில் கட்டியுள்ளனர்.
இந்த சதி எதுவும் தெரியாமல் நான் அங்கு சென்றேன்.
அந்த இடத்திற்கு சென்றபோது 120 பேரும் ஒரே கூச்சல்.'
நான் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்தேன்.
''  எல்லோரும் எதோ ஒரு பெஞ்சில் உட்காருங்கள்.உங்களுக்கு கேள்வித்தாளு ம் ,விடைத்தாளும்  வழங்கப்படும். '' என்றேன்.
அத்தனை பேரும் இரண்டே நிமிடத்தில் கிடைத்த இடத்தில் அமர்ந்தனர்.
 கேள்வித்தாளு ம் ,விடைத்தாளும் வழங்கப்பட்டது.
( கண்ணீருடன் நின்று கொண்டிருந்த அவர்கள் 
தேர்வு எழுத முடியாது என்று அறிவிக்கப் பட்டிருந்த அவர்கள் )
என்ன ஒரு நிம்மதி .:
அப்புறம் அவர்கள் அனைவரிடத்தும் ஒரு undertaking எழுதி வாங்கிக் கொண்டேன்.
இரண்டாம் நாளும் இது தொடர்ந்தது..
மூன்றாம் நாள் ஹால் டிக்கெட் வந்து  விட்டது.
THE GREATEST JOINT DIRECTOR  வேக வேகமாக வந்தார். புஸ் புஸ் என்ற கோப மூச்சு.இவ்வளவு இளையவளான இவளை எப்படி இந்த பொறுப்பிற்கு ????
அதில் நான் இவ்வளவு சரியாக செயல்பட்டேன் என்பது இன்னும் கூடுதல் எரிச்சல்.
ஆனால் 
என்னை எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வளவு கதை எதற்கு என்றால் 
அன்று நான் எடுத்த துணிச்சலான முடிவு 120 பேரின் எதிர்காலத்தை நற்காலமாக மாற்றியது.
இன்று இந்த officers யாருக்கும் பயப்படாமல் தண்ணிரை உரிய நேரத்தில் திறந்து விட்டிருந்தால் சென்னைக்கு இந்த கொடூர சோகம் நிகழ்ந்திருக்காது .
அரசு அதிகாரிகளை என்ன செய்து விட முடியும்?
அட அப்படியே வீட்டிற்குதான் அனுப்பட்டுமே.
பிழைக்க வழியே இல்லையா?
இத்தனை மக்களை காப்பாற்றினோம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
கார்த்திக் அம்மா

  

No comments: