About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/03/26

இளையராஜா and இயேசு

சிவன்,ராமன், இயேசு புத்தர் என யாரையும் யாரும் பார்த்ததில்லை.
யாருடைய  பிறப்பிற்கும் அதிசயங்களுக்கும் எந்த ஒரு சாட்சியும் இல்லை .
எந்த மதமாகட்டும்.
எந்த கடவுள் ஆகட்டும் .
யாராவது நிரூபித்துள்ளார்களா ?
இன்றைய சூழ்நிலையில் எதற்காக மதம் பற்றி பேச வேண்டும்.
இவர் எப்படி ரமணர் மேல் நம்பிக்கை கொண்டுள்ளாரோ
அது போல் இயேசு மேல் நம்பிக்கை கொள்வது அவர்கள் உரிமை.
அவர்கள் விருப்பம்.
ரமணர் பற்றி சொல்லுங்கள்.
ஆனால் இயேசு பற்றி ஏன் பேசுகிறீர்கள்.
எனக்கு இட்லி பிடிக்காது என்றால்
இட்லி சாப்பிடுபவர்களை பார்த்து
'' ''ஐய்யே இதையெல்லாம் யாராவது சாப்பிடுவார்களா ??'' ''
என்று கேட்பது எவ்வளவு தவறோ
அதே போல்தான் இதுவும்.
நான் ஞானி அல்ல .
ஆனால் ஒரு ஞானி இப்படி பேசலாமா ????
நானும் ஒரு இந்துதான் .
BUT religious tolerance is the most needed and most wanted concept of this time .
கார்த்திக் அம்மா
KALA KARTHIK 

4 comments:

Anonymous said...

இத்தனை நாளாக ஆண்டாள் , மற்றும் ஏனைய இந்து கடவுள்களை மாற்று மதத்தவர்களும் , திராவிட கழகமும் வசைபாடிய போது கொண்டாடியவர்கள் இப்போ ராஜாவை வசை பாடுகின்றார்கள்

Anonymous said...

http://vijayanagar.blogspot.in/2018/01/blog-post_14.html

உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா ?

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

ANONYMOUS
U READ MY POST which i have given here.திருப்பதி உண்டியல் s .a சந்திரசேகரும் :

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவள் நான் .Religious Tolerance உண்டு.

என் அம்மாவைப் போலவே பக்கத்து வீட்டு பெண்களையும் என் அம்மாவாகவே மதிக்கும் குணம் உண்டு.

ஆனால் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

என் தாயை மீண்டும் மீண்டும் கேலி செய்தால் பொங்கத்தான் வேண்டும்.

கோபம்தான் வரும்.

மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ?

ஒரு நடிகரின் தந்தை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ?

திருப்பதி கோவில் உண்டியலில் பணம் போட்டு லஞ்சம் கொடுக்கிறோமாம்.

படிக்காமலேயே பாஸ் செய்ய வைத்து விடுவாரா கடவுள் என்று கேட்கிறார் .

அப்புறம் ஏன் உன் மகன் jesus saves என்று letter head ல் அடிக்க வேண்டும்?

சர்ச்சில் , வருமானத்தில் 10ல் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லையா?

உங்கள் சர்ச்சை

(church ) பற்றி பேசுங்கள்.

அதை பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்.

உங்கள் மதத்தின் குளறுபடிகளை பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள்

கோவில் உண்டியலில் பணம் போடுவது தர்ம காரியங்களுக்கு பயன் படுத்தத்தான் .

மனதை ஒரு முகப் படுத்தி concentration கிடைக்கும் முறைதான் வழிபாடு.

உடலை ஆரோக்கியம் ஆக்கவே கற்பூரம் ,மலர்களின் வாசனை,ஹோமம் ,சாம்பிராணி எல்லாம்.

தெரிந்தால் பேசவும்.

அறிவியல் அடிப்படையில் உருவானது இந்து மதம்.

வழிபாடுகள் அனைத்திலும் அறிவியல் இருக்கும்.

புரிந்து கொள்ளவும்.

நிறுத்திக் கொள்ளவும்.// ......
without knowing the full picture please do not pass hasty comments.
anbudan
karthik amma
kalakarthik


Jeevan said...

Agree with you!