About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/03/06

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
காலன்   (எமன் ) வர முடியாது என்பது இதன் பொருள்.சத்தியவான் உயிரை பறிக்க வந்த எமனிடம் சாவித்திரி பேசிப் பேசியே அவனிடம் வரம் பெற்றுகணவனை காப்பாற்றுகிறாள் என்பது கதை.
 எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே  சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான்  சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
ஒரு கற்புக்கரசி கண்களுக்கு மட்டும் எமன்   தெரிவார் என்றும் அவருடன் பேச முடியும் என்பதாக நம்ப வைக்கப் படுகிறது.என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள்கணவனை இழந்துள்ளனர்?அவர்கள் கண்ணுக்கெல்லாம்  எமதர்மன் தெரியவில்லையா?அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
கோவிலுக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்கு  இப்படி கதை சொல்லிக் கொண்டே போக வேண்டாம்.
காலன் அடையா நோன்பு என்பதுதான் திரிந்து காரடையான் நோன்பாக ஆகி விட்டது.
நாமும் பொருள் புரியாமலே பல பண்டிகைகளை கொண்டாடுகிறோம்.
 கார்த்திக் அம்மா

No comments: