About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/01/26

திண்டுக்கல் தனபாலன்

நன்றி.நன்றி.
என்னருமை இளையவர் திண்டுக்கல் தனபாலன்.
இஸ்ரோ வீடியோ எடுக்கும் போது அதை போஸ்ட்டில் போடும் எண்ணம் இல்லை .ஆனால் அதை பார்த்த போது திடீரென அந்த எண்ணம் வந்தது.
வலையில் ஏதோ எழுத தெரியுமே அன்றி,மிக அதிக நுட்பங்கள் தெரியாது.
உதவிக்கு என்றவுடன் நினைவிற்கு வந்தவர் இந்த ''வலையுலக சித்தர் ''தான்.அவருக்கு போன் செய்தேன்.
என்ன அவசர வேலையில் இருந்தாரோ?
அவ்வளவு பொறுமையாக அன்பாக சொல்லிக் கொடுத்தார்.
எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.வாழ்க அந்த நல்லவர்.
..... ......
இன்று டெல்லியில் குடியரசு விழாவில் நம் தமிழ் நாடு ஊர்தி வந்தது.விவசாயிகள் கோவணத்துடன் ஏர் ஓட்டுவது போல் வந்தனர்.யார் இப்போது கோவணம் கட்டுகின்றனர்???? யார் ஏர் ஓட்டுகின்றனர்?
எல்லோரும் ட்ரேக்டர் தான் பயன்படுத்துகின்றனர்.
யாருக்கு வந்தது இந்த concept ?
கேவலம்.
.... .....
இஸ்ரோவிற்கு கண்டனம்:
11.40 க்கு விண்ணில் ஏவப்படும் என்று சொல்லி விட்டு 11.37 க்கே ஆரம்பித்து விட்டனர்.இன்னும் ஒரு 2 நிமிடம் லேட்டாக மொட்டை மாடிக்கு சென்று இருந்தால் ..அவ்வளவுதான்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மிக்க நன்றி அம்மா...

இன்னும் உங்களுக்கு சொன்னபடி WhatsApp-ல் படிப்படியான செயல்முறைகளை அனுப்பு முடியவில்லை... மன்னிக்க வேண்டுகிறேன்...

வேகநரி said...

திண்டுக்கல் தனபாலன் புகழ் தமிழ்மணத்தில் ஓங்கி கொண்டேயிருக்கிறது.பெரியவருக்கு வாழ்த்துக்கள்

//இன்று டெல்லியில் குடியரசு விழாவில் நம் தமிழ் நாடு ஊர்தி வந்தது.விவசாயிகள் கோவணத்துடன் ஏர் ஓட்டுவது போல் வந்தனர்.யார் இப்போது கோவணம் கட்டுகின்றனர்???? யார் ஏர் ஓட்டுகின்றனர்?
எல்லோரும் ட்ரேக்டர் தான் பயன்படுத்துகின்றனர்.
யாருக்கு வந்தது இந்த concept ?
கேவலம்.//

மேடம், இதுவும் ஒரு ஜல்லிக்கட்டு போன்ற ஒரு ஏமாற்று நாடகம் தான்.
தமிழகத்தில் யார் தான் இப்போது ஜல்லிக்கட்டுவை கிரிக்கெட், கால்பந்து போன்று விரும்பி விளையாடுகிறார்கள்? கிரிக்கெட் கால்பந்து விளையாடுபவர்களின் பெற்றோர்கள் கூட தங்கள் மகன் ஜல்லிக்கட்டு விளையாடுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டு தமிழனின் பாரம்பரியம் எங்க உயிரையும் கொடுத்தாவது ஜல்லிக்கட்டை காப்போம் என்று தமிழக கம்யூனிஸ்டடுகள் தொடங்கி பாரதிக ஜனதா கட்சி சீமான் கட்சிவரை போராடவில்லையா!

நம்பள்கி said...

[[இன்று டெல்லியில் குடியரசு விழாவில் நம் தமிழ் நாடு ஊர்தி வந்தது.விவசாயிகள் கோவணத்துடன் ஏர் ஓட்டுவது போல் வந்தனர்.யார் இப்போது கோவணம் கட்டுகின்றனர்???? யார் ஏர் ஓட்டுகின்றனர்?
எல்லோரும் ட்ரேக்டர் தான் பயன்படுத்துகின்றனர்.
யாருக்கு வந்தது இந்த concept ?
கேவலம்.]]

There is a reason for this scripted by Delhi and played by TN. Govt.
In order to discredit our farmers' demonstration at Delhi last year for their [farmers'] rights with "Only Komanam" is....to show that Tamil Farmers wear komanam which is their normal ware in day to day life...compared to white men demonstrating with suites (normal wear).

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

நம்பள்கி

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.டெல்லியில் போய் எலிக் கறி தின்று,மண்டை ஓட்டை வைத்துக் கொண்டு நம் விவசாயிகள் அடித்த கூத்து மிகவும் கேவலமாக இருந்தது.அப்போதே அதை கண்டித்து எழுதி இருந்தேன்.வச்சு செஞ்சுட்டாங்க என்பது இதுதானோ ?

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

வேகநரி ,
இருந்தாலும் இது ஒரு பழி (பலி )வாங்கும் படலம் போலும்.