About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/01/23

ஓய்வூதியம்

சிரிக்கிறதா அழுகிறதா
தெரியல.
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
ஓய்வூதியம் கேட்கிறார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்தான் கன்றாவியாக இருக்கிறது.
''58 வயதுக்கு அப்புறம் எங்கள் சாப்பாட்டிற்கு என்ன வழி ?நாங்கள் எப்படி பிழைப்பது ?
என்று ஒரு பெண் ஒரு டி .வி நேரலை நிகழ்ச்சியில் கேட்கிறார்.
ஒரே ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள் .
8 கோடி மக்கள் உள்ள தமிழ் நாட்டில் 10 லட்சம் பேர் மட்டும்தான் அரசு பணியாளர்கள்.
இவர்கள் மற்ற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரை பார்த்ததே இல்லையா ?
ஒரு ஸ்விக்கி நபர் எத்தனை தூரம் ஒரு நாளுக்கு பைக்கில் பறக்கிறார்.
கம்ப்யுட்டர் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் கூட வேலை செய்கிறார்கள்.
இவர்களில்  யாருக்கு ஓய்வூதியம் இருக்கிறது?
இவர்களுக்கு 58 வருடம் என்ற பணி பாதுகாப்பு கூட கிடையாது.
இதே ஊழியர்கள் வேலையில் சேரும் போது ஓய்வூதியம் இல்லை என்ற நிபந்தனையை ஒத்துக் கொண்டுதானே சேர்ந்தார்கள்.
கொஞ்சம் மனசாட்சியுடன் ஒரே ஒரு நிமிடம் நீங்கள் செய்யும் வேலையின் அளவையும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரின் வேலை அளவையும் கம்பேர் செய்து பாருங்கள்.
ஊதிய உயர்வை தவிர உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் திட்டங்களை என்றாவது கேட்டு இருக்கிறீர்களா .
அப்படியே தப்பி தவறி அரசு ஏதாவது செமினார் நடத்தினால் அந்த வகுப்புகளில் சின்சியராக கலந்து கொண்டு ஏதாவது கற்றுக் கொள்கிறீர்களா ?
எப்போது பார்த்தாலும்
சம்பளம் போதவில்லை.
சம்பளம் போதவில்லை.
இதே பாட்டு.
ஒரே ஒரு நாள் CBSE வகுப்பிற்கு சென்று பாடம் நடத்தும் சவாலை ஏற்கிறீர்களா ?
வெறுப்புடன்

1 comment:

Jeevan said...

அரசின் வருமானத்தில் முக்கால் வாசி இவர்கள் சம்பளத்திற்கே போகிறது