About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/09/30

+கார்த்தி+சிலை+மணிமண்டபம்
இது பெங்களூருவில்  கார்த்தியின் வீடு.
அதில் கார்த்தியின் சிலை.
வருபவர்கள் யாரோ நிற்கிறார் என்றே நினைத்துக் கொள்வர்.
இப்போது ஒரு மணிமண்டபத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடக்கிறதே.
என் பொருளாதார நிலைக்கு நான் 2.5 லட்சம் செலவில் சிலை செய்தேன்.
அந்த வீட்டின் மதிப்பு 1.5 கோடி.
அந்த வீட்டை வாடகைக்கு விட்டால் குறைந்தது 25000 அல்லது 35000 கிடைக்கும்.
என் பொருளாதார நிலைக்கு அது பெரிய வருமானம்தான்.
ஆனால் வீட்டை விற்கவும் இல்லை.
வாடகைக்கும் விடவில்லை.
அந்த வீட்டை ஒரு கோவிலாக ,புனிதமாக வைத்துள்ளேன்.
கார்த்திக்கிற்கு விபத்து நடந்த அன்று வீடு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.
அவனுடைய bike ம்
சிலையும்
ஊஞ்சலும் மட்டும்தான் சேர்ந்துள்ளது.
(ஊஞ்சல் கார்த்தி , செந்தில் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கியது.)
மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து பெங்களூரு சென்று வருகிறேன்.
அங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும்.அதை நான் எவ்வளவு போற்றுகிறேன் என்று.
......    ......  ......
என் கார்த்தி தன்  23 வயதில் எத்தனை சாதனைகள்.
U .S ல் மிகப் பெரிய சம்பளத்தில் 2002 ம் வருடம் வேலை கிடைத்தும் இந்தியாவிற்குதான் உழைப்பேன் என்றவன்.
அவனுடைய resume  படித்து பாருங்கள்.
அவன் நாட்டிற்கு செய்த அளவு கூட ஒரு நடிகர் செய்யவில்லை.
அவரை பிடிக்கும் என்றால் என்னை  போல் சொந்த செலவில் செய்யுங்கள்.
அவருக்கு நீங்களே ஒரு மண்டபம் கட்டுங்கள்.
ஒரு 10000 பேரை அழைத்து திறப்பு விழா செய்யுங்கள்.
அதை விட்டு
அரசு செலவில் , அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று நிர்பந்திக்க என்ன உரிமை இருக்கிறது???
M .G .R  விழா பற்றியும் என் கேள்வி அதுதான்.
என் வரிப் பணத்தை என் அனுமதியில்லாமல் உங்கள் விருப்பத்திற்கு செலவு செய்ய உங்களுக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?கட்சி செலவில் செய்யுங்கள்.
என்னை முன்மாதிரியாக கொள்ளலாமே.கார்த்தியின் தம்பி செந்திலும் அந்த வீட்டை வாடகைக்கு கூட வீட கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டான்.அவனுக்கும் என் நன்றி.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

No comments: