About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/05/12

ஆசிரியை

*group discussion 
****ஸில்க் ஸ்மிதா 
&&&    interview 
சென்ற பதிவில் சொன்னேன்.
 செய்முறை வகுப்புகளில் பல கலாட்டாக்கள் நடக்கும் என்று.
படிப்பவர்களுக்கு போரடிக்குமோ என்று தெரியவில்லை.இருந்தாலும் எழுதுகிறேன்.
குரூப் டிஸ்கஷன் :
+2 மாணவர்களுக்கு ஆங்கில செய்முறையில் இதுவும் ஒரு பகுதி.
ஒரு வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த நாள்
பாகிஸ்தான் vs இந்தியா
என்ற தலைப்பில் விவாதம் என்று சொல்லி மாணவர்கள் தயாராக வர வேண்டும் என்று சொல்லியாயிற்று
வகுப்பை இரு பிரிவாக பிரித்து ஒரு பகுதி இந்தியா இன்னொரு பக்கம் பாகிஸ்தான் .
விவாதம் ஆரம்பித்தது.
முதலில் மாணவர்கள் என்னவோ பொறுமையாகத்தான் ஆரம்பித்தார்கள்.
கஷ்டப் பட்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள் .ஆனால் நானே எதிர்பாராத அளவு பாயிண்ட்ஸ் .சிறிது நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
நேரம் செல்ல செல்ல விவாதம் உக்கிரமாகி விட்டது.
கோபம்
ரௌத்திரம் .
தமிழுக்கு மாறி விட்டார்கள்.
இந்த பெஞ்சில் இருந்து அடுத்த பெஞ்சுக்கு குதிக்கும் அளவிற்கு கிட்ட தட்ட ஒரு சட்ட சபை ரேஞ்சுக்கு போய்விட்டது.
நான் சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருந்தேன்.
கூச்சலையும் குழப்பத்தையும் பார்த்த தலைமை ஆசிரியர் ஏதோ விபரீதம் என நினைத்து மூச்சு வாங்க ஓடி வந்தார் .
''என்ன பிரச்சினை ''என்கிறார்.
சார் ''பிராக்டிகல் ''என்றேன்.
''நல்ல பிராக்டிகல்'' என்று பெரு மூச்சு விட்டார்.
.......
ஸில்க் :
எனக்கு சினிமா அறிவு என்பது மிக மிக குறைவு .அதுவும் 1990 களில் சுத்த ஜிரோ .0 மதிப்பெண்.எதேச்சையாக டி .வியில் கிளியோபாட்ரா என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன் அந்த காட்சியை பார்த்து விட்டு அடுத்த நாள் வகுப்பில் ஏண்டா மகன்களா (மாணவர்களை மகன்களா என்றும் என் மகன்களான கார்த்தி,செந்திலை குட்டிஸ் என்றும்தான் சொல்வேன்)
கிளியோபாட்ராவுக்கு வந்த கொடுமை
 ஸில்க் ஸ்மித்தாவெல்லாம் கிளியோபாட்ராவாக நடிக்க வேண்டுமா என்று கேட்டு விட்டேன்.
ஐயோ என்று சொல்லிக் கொண்டு மாணவர்கள் அனைவரும் டெஸ்க்கில் தலை கவிழ்ந்து கொண்டனர்.
அழுகிறார்களாம் .
ஒரு மாணவன் சொன்னான்
டீச்சர் தயவு செய்து இனிமேல் சினிமா பற்றி பேசாதீர்கள் .எங்கள் ஸில்க் கை  இவ்வளவு கேவல படுத்தி  விட்டீர்கள் .என்று சொல்லி விட்டு மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டனர்.
அழுகிறார்களாம்.
பதிவு மிக நீள்கிறது .
நாளை சிந்திப்போம்.
கார்த்திக் அம்மா

 

No comments: