About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/05/31

தமிழ்நாடு ..சுடுகாடு

அட அவர் பேசிய மீதி எல்லாவற்றையும் விட்டு விடலாம்.
என்ன ஆக்ரோஷம்
என்ன ஒரு முக சுழிப்பு.
பெரிய ஆன்மிகவாதி.
மிக மிக நல்லவர்.????????????
அப்படிப் பட்டவர் வாயிலிருந்து இப்படி சாபம் வரலாமா ?????????
தண்ணீர் வரவில்லை.
குடிக்க தண்ணீர் இல்லை.
குழந்தை தாகத்தில் தவிக்கிறது.
உரியவர்களிடம் மனு கொடுக்கிறார்கள்.
அதிகாரிகள் உடனே வந்து பிரச்சினையை தீர்த்து விட்டால் மக்கள் ஏன் காலி குடங்களுடன் போராட போகிறார்கள்.
இதையெல்லாம் எந்த தீய சக்திகள் தூண்டி விடுகின்றன?
அப்படியே அவர்கள் தூண்டி விட்டுத்தான் போராடுகிறார்கள் என்றே  வைத்துக் கொள்வோம்.
அரசு பிரச்சினையை தீர்க்கட்டுமே.
மக்களுக்கு நல்லது செய்யட்டுமே.
இவருக்கு எல்லாம் நல்லதே நடக்கும்
மற்றவர்கள் உயிரை பறி கொடுக்க வேண்டும்.
அப்படி தமிழ்நாடு சுடு காடானால் இவருக்கு சந்தோஷமா ???????????
என்ன சொல்லியிருக்கலாம்.
ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் வாருங்கள்.
உரியவர்களிடம் பேசி உங்கள் பிரச்சினைகளை நான் தீர்த்து வைக்கிறேன்
என்று சொல்லி பிரச்சினைகளை தீர்த்து விட்டால் மக்கள் ஏன் போராடப் போகிறார்கள்.
சரி.
மக்கள்தான் முதலில் போலீசை அடித்தார்கள்.
சரி
அதற்காக மக்களை  சுட வேண்டுமா
அவருக்குத்தான் யார் தீவிரவாதிகள் யார் என்று தெரியுமே.போலீசிடம் அந்த லிஸ்ட் கொடுத்து அவர்களை கைது செய்து தண்டனை கொடுக்கட்டும்.
அதை விட்டு
சுடுகாடு ஆகி விடும் என்றால் எங்கள் உயிரையம் பறிக்க விடும் மிரட்டலா
கார்த்திக் அம்மா

5 comments:

Jeevan said...

agree fully!

Angel said...

ஆமாம் கார்த்திக் அம்மா .நேற்று நானும் நினைச்சேன் .தெரியும்னு சொல்றாரே அப்போ போலீஸ்கிட்ட information கொடுக்கலாமே .எல்லாத்துக்கும் போராடினா சுடுகாடாகிடும்னு சொல்றவர் முதலில் அவர் படத்தில் வீர வசனங்களை பேசி அப்பாவிங்களை உசுப்பேற்றாம இருந்தாலே போதும் .இவர் படத்தில் சொல்றதை அப்பாவிங்க சீரியஸா எடுக்கறாங்க . ஆனாலும் ஆன்மீகம் அடிக்கடி இமயமலை என இருப்பவர் இந்த பத்திரிகையாளர்களை இன்னும் பொறுமையாக கையாண்டிருக்கலாம் .

வருண் said...

அப்பாவி மக்கள் கலகக்காரர்களால் பலியாவார்கள்.


https://youtu.be/UrXphxwtUZ0

துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் இந்த வீடியோவுக்கும் உங்க பதில் என்ன கார்த்திக் அம்மா?!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

anjel

வரவிற்கு நன்றி.அடிக்கடி வாருங்கள்.என்னவோ உங்கள் பேரை பார்த்தவுடன் மனதிற்கு ஒரு ஆறுதல் வரும்
கார்த்திக் அம்மா

ஆதி said...

காலமும்,நிலையும் அறீயா மிகுந்த எதிர்பார்ப்பு,