About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/06/23

திருந்தவே மாட்டார்கள்:
உத்தரகாண்ட் மாநிலம் :
இப்படி ஒரு கொடுமை ,மக்களின் உயிர் போராட்டம்.அப்பப்பா ....டி .வி .யில் பார்க்க பார்க்க  மனம் பதைபதைத்து  போகிறது.
ஆனால் பல கேள்விகள்.
அங்கே போய்தான் சாமி கும்பிட வேண்டுமா ?
வீட்டிலிருந்து கும்பிட்டால் சாமி ( அப்படியென்று ஒன்று இருந்தால் ) வரம் கொடுக்காதா
தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத சாமி பக்தர்களை எப்படி காப்பாற்றும்?
பக்தர்கள் ..என்ன வகையான பக்தி ?...ஒரு உல்லாச பயணத்தை கடவுளின் பெயரால் அனுபவிக்கிறார்கள்.
அதுவும் ஒரு பிரபலம் இமயமலை செல்வதால் எல்லோரும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் .
அதே பிரபலம்தான்  திருவண்ணாமலை  கிரி வலத்திற்கும் காரணம்.
அதே போல்தான் பிரதோஷம் .ஒரு டி .வி தொடரில் கதாநாயகி பிரதோஷ விரதம் கடைபிடிப்பது போல் காட்டினார்கள் .அவ்வளவுதான்.இன்று பிரதோஷம் அன்று கோவில் தள்ளாடுகிறது.
அதற்கு மேல் டி .வி யில் வரும் ஜோதிடர்கள்.இந்த கோவிலுக்கு போனால் இந்தியாவின் அடுத்த பிரதமர் நீங்கள்தான்.
அடுத்த கோவிலுக்கு போனால்  நீங்கள்தான் அமெரிக்காவின் அடுத்த president என்ற ரேஞ்சுக்கு ஏத்தி விடுகிறார்கள்.
காசி கயா  போனால் முக்தி கிடைக்கும் என்றால்  அங்கு பிறந்தவர்கள் எல்லாம் முக்தி அடைய வேண்டும் (முக்தி  என்றால் என்ன ?  அதை அடைந்தவர்கள் யாராவது வந்து சொன்னார்களா ?)
மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னவை எல்லாம் வியாபாரமாக்கி விட்டார்கள்.
இதையெல்லாம் விட கொடுமை.
POLITICS :
அட ஒரு உயிரை காப்பாற்ற 10 பேர் போராடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கோவில் கட்ட உதவுகிறேன் என்று திருவாய் மலர்ந்திருக்கிறது ஒரு ****.....********** எத்தனை வார்த்தைகளினாலும் திட்டலாம் என்று ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.முதலில் உயிர்களை காப்பாற்றுங்கள்.அவர்கள் தமிழர்களா, குஜராத்திகளா ,கன்னடிகர்களா என்பதில்லை. அவர்கள் மனிதர்கள் .
காப்பாற்றியவர்கலுக்கு  உணவு, வீடு கொடுங்கள்.
அப்புறம் ,அவர்களுக்கு சம்பாதிக்க வேலை கொடுங்கள். அதற்கு ஒரு தொழிற்சாலை கட்டுங்கள்.இதெல்லாம் முடிந்த பிறகு கோவில் கட்டுவது பற்றி யோசியுங்கள்.
DONATION 
இது அடுத்த விஷயம்.இந்த மக்களை காப்பாற்ற போய் உயிரிழந்த அந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவுவது மிக மிக முக்கிய விஷயம்..
அவர்களின் குடும்ப இருப்பிடம் அறிந்து அங்கு செல்ல யாராவது முன்வந்தால் அவர்களுடன் சென்று உதவ நானும் தயார்.
ஒரு அதிகாரி சொன்னார் .
'' பணம் நிறைய இருக்கிறது.ஆனால் பணம் இப்போது எதுவும் செய்ய முடியாது.''
எவ்வளவு உண்மையான  வார்த்தைகள்.
மனிதர்கள் உணர வேண்டிய விஷயம்.
நம் முப்படை வீரர்களுக்கு நன்றி சொல்லாமல் பதிவை முடித்தால் 100 கோடி பாவம் வந்து சேரும்.நன்றி.நன்றி.சகோதரர்களே.
கார்த்திக+ அம்மா 

1 comment:

Jeevan said...

Totally agree! You spoke the truth.