About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/06/10

Tit  Bits :
சோம்பேறித் தனமா ,lack  of  interest எது என தெரியவில்லை ,பதிவு எழுத விஷயம் இல்லையா ,
எழுதும் விஷயங்கள் படிக்கப் படுகிறதா
எதையாவது எழுதப் போய்  யாராவது வழக்கு போட்டு விடுவார்களா
என்றெல்லாம் யோசனை.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் எதிலும் ஆர்வம் ,பிடிப்பு இல்லாத ஒரு மன நிலை.
  கார்த்தி கண்ணுக்குள் களி நடனம் ஆடிக் கொண்டேயிருக்கிறான்.வேதனை குறையவில்லை.வருத்தம் மறையவில்லை.
......     .......
பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் வெளிநாட்டுச்சுற்றுப்பயணங்களுக்காக  ரூ.642 கோடி செலவழித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது
 இவர் மேல் எனக்கிருந்த மதிப்பு போயே போய் விட்டது.The instance  of  his adamance of  not accepting to fire out  the tainted  ministers increased the bitterness .இந்த முறை சைனா சென்ற போதும் அவர் மனைவி கையசைத்த பிறகுதான் நகர்கிறார்.  ஒரு பேட்டியில்  என் மனைவிதான்  என்னுடைய பிரதான adviser , அவர் சொல்படிதான் நான்  நடக்கிறேன் என்கிறார்.
வெறுத்து விட்டது .
....  .......
BANKS :
இவர்கள் கதை அதை விட பெரியது.
லீனா+காதலன்  சொன்ன நபர்களுக்கு கோடி கோடியாய்  கொடுத்திருக்கிறார்கள். நானோ , நீங்களோ போய்  கேட்டு பாருங்கள்.100 முறை அலைய வைப்பார்கள். கொடுத்த அடுத்த நாளில் இருந்து எப்போது திருப்பி செலுத்துவீர்கள் என்று நச்சரிப்பார்கள்.Fine  போடுவார்கள்.
மல்லையாவிற்கு கொடுத்தீர்களே என்று ஒரு ஆங்கில தொலை காட்சியில்  கேட்டால் அது எங்கள் வங்கி சொத்து மதிப்பில் 1% என்கிறார். அதனால் வங்கிக்கு பெர்ய பாதிப்பில்லை என்கிறார்.
நம் F .D க்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரிக்கும் அதே வங்கி இந்த பெரிய corporate களிடம் மண்டியிடுகின்றன.
...... ......
பிரதான ,முக்கிய  முக்கிய பிரச்சினை  காய் கறி  (காய் சரி ...அது என்ன கறி ?Its curry ,தங்க்லீஷ் )
காய் விலை.  
காய் கடைக்கு போய் விட்டு வீட்டிற்கு திரும்பும் போது பயமாய் இருக்கிறது.மக்கள் பையை வெறித்து வெறித்து பார்க்கிறார்கள். இப்போது நகையை திருடுவதை விட காய் பையை பறித்துக்கொண்டு  ஓடுவார்கள் என நினைக்கிறேன்.அப்படியே காய் பையை பத்திரமாக கொண்டு வந்து விட்டால் ,ஒரே உடம்பு வலி  '' ''திருஷ்டி '' ''
ஏன் என்றால் நான் சின்ன (சாம்பார் ) வெங்காயம் ஒரு கிலோ ,தக்காளி ஒரு கிலோ வாங்கி வந்தேன்.
ha ,only millionairess  can buy .
இதற்கு தீர்வு என்ன ?
நம் விவசாயிகளின் சோம்பேறித்தனம்தான். நானும் ஒரு விவசாயி. என் கிராமத்தில் நான் சொல்கிறேன்.''வருடம் முழுதும் விளையும் தக்காளி போன்ற செடிகளை நடலாம்   . புது techniques  பயன்படுத்தலாம் .Compound farming  செய்யலாம் '' 
எது சொன்னாலும் கேட்பதில்லை.ஒரு எள் ,ஒரு நெல் என்று பழைய நடைமுறை தான் . தண்ணீர் இல்லை என்று ஒரு ஒப்பாரி. இருக்கும் நீரில் செய்ய முடிந்தவற்றை செய்ய முயற்சி செய்வதில்லை.சுலபமாக  பணம் வர வேண்டும். 
இப்போது பக்கத்து மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம் .அப்புறம் பக்கத்து நாடுகளில் இருந்து வாங்குவோம்.
தமிழ் நாடுதான் பணக்கார நாடாயிற்றே.
வாழ்க 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை அமைதிப் படுத்த அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...