About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/06/19

Today there was a news about +2 students not getting hall ticket for the arrears exam  and are not able to write their exam.
 எனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி நினைவு வந்தது.
When I  was working in Metturdam ,இதே போல் ஒரு நிகழ்வு.
என் தலைமையாசிரியருக்கு என் மேல் ஒரு நெருடல் இருந்தது.என்னடா ,இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு திறமையாக இருக்கிறது இந்த பெண் .எந்த வேலை கொடுத்தாலும் perfect ஆக முடித்துவிடுகிறதே .யானை எப்போது சறுக்கும் என்று எதிர்பார்த்து ஏதோதோ முடிக்க முடியாத tasks ,(tough tasks ) கொடுப்பார்.ஆனால் எனக்கு சூது தெரியாது.எனக்கு பின்னால் திரை மறைவில் நடக்கும் சதிகள் பற்றி தெரியாது.தெரிந்து கொள்ளவும் விரும்பியிருக்க மாட்டேன்.சித்தம் போக்கு சிவன் போக்கு என்று நான் பாட்டிற்கு கொடுத்த வேலைகளை செய்வேன்.
இப்படியாகத்தானே
.... .....
ஒரு துணைத் தேர்விற்கு என்னை முதன்மை கண்காநிப்பாளாராக நியமித்தார்.வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த என் கையில் ஒரு file கொடுத்து ,'' நீங்கள் இந்த தேர்வை நடத்துங்கள் '' என்றார்.
எப்போதும் போல் நான் இந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன்.அரங்கிற்கு வந்து பார்த்த போது 120 மாணவ மாணவிகள்  நின்று கொண்டிருந்தனர்.அவர்களுக்கு அறை எதுவும் ஒதுக்கப்படவில்லை.தேர்வு எண்களுக்குண்டான அறை ,bench desk ல் அவர்கள் தேர்வு எண்  எழுதப் பட்டிருக்க வேண்டும். இது எதுவுமே செய்யவில்லை என் தலைமை  ஆசிரியர்.
.....
இந்த மாணவர்களுக்கு hall ticket  வரவில்லை.இவ்வளவு குழப்பங்கள் இருந்ததால் most junior ஆன என்னிடம் இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்.பாதி மாணவிகள் அழுகையோ அழுகை..நீங்கள் தேர்வு எழுத முடியாது என்று அங்கு ஒருவர் அந்த மாணவ, மாணவிகளை மிரட்டிக் கொண்டிருந்தார்..நான் அவர்களை( 4 அறைகள் ) போய் உள்ளே எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காருங்கள்.ஒரு பேப்பரில் ''நான் இந்த தேர்வு எழுத வந்தேன்,hall ticket கிடைக்கவில்லை..இன்று எழுதும் தேர்விற்கு பிறகு அரசு எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுகிறோம்'' என்று எழுதிக் கொடுங்கள் ''என்று எழுதி வாங்கிக் கொண்டு கேள்வித் தாள்,விடைத்தாள் கொடுத்து,''தைரியமாக எழுதுங்கள் '' என்று தைரியமளித்து அவர்களும் உற்சாகமாகி தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
.....அப்போது Joint Director வந்தார்.என்னை பார்த்து குழம்பி ''நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் ?''என்றார்.
Sir ,I  am the chief ,for the arrears exam ''
அவர் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்.இந்த பெண் (ஒரு மாணவி போல்தான் இருப்பேன்.அது பற்றி சுவையான நிகழ்ச்சி பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.).உள்ளே சென்றார்..தேர்வு சிறப்பாக குழப்பம் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது..ஏதோதோ குழப்பங்களை எதிர்பார்த்து வந்தவர் தேர்வு அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்து கொண்டிருந்ததை பார்த்து வாய் பேசாமல் சென்று விட்டார்.
நான் என்ன செய்தேன் என்பதே எனக்கு தெரியாது.இந்த hall ticket வராதது பற்றி யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.ஒரு வாய்ப்பு தவறினாலும் வாழ்க்கை பாதையே மாறிவிடக் கூடும்.அதனால் அவர்களை எழுத வைத்து விட்டேன்.என் தலைமை ஆசிரியர்தான் பாவம்.யானை எப்போதுடா சறுக்கும் ,பட்டாசு வெடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.என் மேல் department action வரும் .மாட்டினாயா மகளே என்று குதூகலித்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.
அடுத்த நாள் சக ஆசிரியைகள் பொறாமையுடன்  கிண்டல்.''இந்த குழந்தையை விட்டால் வேறு யாரும்  தேர்வு நடத்த மாட்டார்களா ?''
வெகு நாட்களுக்கு அப்புறம்தான் தலைமை ஆசிரியரின் சதி தெரிந்தது.பாஆ ஆ ஆ வம் .
பி.கு.
யானை சறுக்கவில்லை தூள் தூளாகி விட்டது.
...... ....
தான் இறந்தாலும் தன மகனை காப்பாற்ற போராடும் இந்த தந்தையின் முன் நான் மனம் வெதும்பி நிற்கிறேன்.
கார்த்திக் அம்மா 

1 comment:

Jeevan said...

You are an excellent teacher! brave enough... i am sure many students will miss you.