About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/07/16

120 கோடி பணம்+100 கிலோ தங்கம்

அம்மாடியோவ்
போதுமா
என்னதான் செய்வார்கள்?
இவ்வளவு பணத்தை கண்ணால் பார்த்தால் மயக்கம் வந்து விடும்.
இவர்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டும்.
எம் .ஜி ஆர்
ஜெ அம்மையாருக்கு இல்லாத பணமா ????
எவ்வளவு பணம் இருந்து என்ன காப்பாற்றியது?
இன்னும் எத்தனை பேரை சொல்லலாம்.
ஆனாலும் ஏன் இந்த பேராசை?
ஒரு கிலோ தங்கம் என்றால் 124 பவுன் (சவரன் )
அப்படி என்றால்
100*124 =12400 பவுன் நகை.
ஒரு நாள் போட்ட நகையை  அடுத்த நாள் போட மாட்டார்களோ?
நியாயமாக சம்பாதித்தாலே கூட இவ்வளவு நகை தேவையில்லை.
அப்படியிருக்க இப்படி அநியாய வழியில் சம்பாதித்து  இப்படி அனுபவிக்க வேண்டுமா?
இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு.?
எனக்கு தினமும் ஒரு எஸ் .எம்.எஸ் + ஒரு மெய்ல் வருகிறது.
நான் கட்டிய துக்கிளியூண்டு வரிக்கு இவ்வளவு மிரட்டல்.
ஜூலை 31க்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன செய்கிறோம் பார் என்ற தொனியில் இருக்கிறது
இவர்களை என்ன செய்வார்கள்?
இது வரை ரெய்டு போனார்கள்.
அவர்களை என்ன செய்து விட்டார்கள்?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
நானும்தான்.
கார்த்திக் அம்மா

1 comment:

Anuprem said...

நிஜம் தான்..நடுத்தர மக்களை மிரட்டுவது தான் இவர்கள் செய்வது..கால கொடுமை