About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/07/18

ராகு +கேது

ராகு +கேது +ஜாதகம்.
ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை என்பவர் சிலர்.
ஆனால் ஜாதக பைத்தியமாக இருப்பவர் பலர்.
ஜோதிடம் மிகப் பெரிய அறிவியல்.
மிக மிக பெரிய அறிவியல்.
ITS A WONDERFUL SCIENCE .
கோள்களின் சதிராட்டம்.
சிறிது பொறுமை வேண்டும்.இதை படிக்கவும்..புரிந்து கொள்ளவும்.
360 degree என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த 360 degree யைத்தான் 30 முப்பது டிகிரியாக பிரித்து 12 மாதங்கள் என்கிறார்கள்.
அந்த 12 தான் ஜாதக கட்டங்கள்.
முதல் கட்டம் மேஷம் .அங்குதான் சூரியன் உச்சம் பெறுகிறார்.
அதுதான் சித்திரை .ஆக வருட பிறப்பு சித்திரை ஒன்றுதான்.
உச்சம் என்றால் முழு பலத்துடன் இருப்பது.
வெய்யில் காலம்.summer .
சூரியன் 7 குதிரை பூட்டிய தேரில் வருகிறார் என்பார்கள்.
அந்த 7 தான் 7 வர்ணங்கள்.
7 colours .
vibgyor
அத்துடன்
அல்ட்ரா வயலட் (ultra violet )புற  ஊதா 
infra red அக சிவப்பு
so nine planets = nine colours .
ஒவ்வொரு கோளுக்கும் ஒரு வண்ணம் .ஒரு தானியம்.ஒரு ரத்தினம்.
நவ தானியம்.
நவ ரத்தினம்.
இந்த 9 வண்ணங்களை தாண்டி NASA வும் எதையும் கண்டு பிடிக்கவில்லை.
நம் சித்தர்கள் எந்த டெலஸ்கோப் வைத்து பார்த்தார்கள்?
எப்படி ஆராய்ச்சி செய்தார்கள் ?
பெரிய மலைப்பான விஷயம்.ஆனால் ஏதோ செய்திருக்கிறார்கள்.
அப்போது கணிக்கிறார்கள் .இன்று சூரிய கிரகணம்.
இன்று பிறை வட கோடு உயர சுபிட்ச மழை வருஷிக்கும் என்று நாட்காட்டியில் போட்டிருக்கும்.
கவனித்து பார்த்தால் ஒரு இரு துளி மழையாவது அன்று பெய்யும்.
ஆனால் அன்று சந்திர பிறையின் வடக்கு நீண்டு வர வேண்டும்.
அப்போது கணித்தது இப்போதும் நடக்கிறது.
நம்பாதவர்களுக்கு ஒரு உதாரணம்.
இப்போது ஜாதக கட்டத்தில் கோள் சார படி (கோச்சார ம்  என்று சொல்கிறோமே ) அந்த கோள் எந்த கட்டத்தை சார்ந்து இருக்கிறதோ அதுவே கோள் சாரம் .
இப்போது செவ்வாய் எனும் கோள் சனி (சனிஸ்வரர் அல்ல சனாச்சாரியார் )கிரகத்தின் வீடான மகரத்தில் உச்சம் (மிக அதிக வலிமையுடன் )உள்ளது.நீங்களே பாருங்கள். உலகம் முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி எங்கு பார்த்தாலும் தண்ணீர் .இதுதான் கோள்களின் சதிராட்டம்.
இது போல் வக்கிரம் எனும் சொல்.
ஒரு 3 பஸ்கள் ஒரு சாலையில் போய் கொண்டிருக்கின்றன.ஒரு பஸ் அடுத்த பஸ்ஸை ஓவர்டேக் செய்யும் போது இந்த பஸ் பின்னால் செல்கிறது.அதுவே வக்கிரம் .அதே பஸ் வேகம் எடுத்து ஒரு பஸ்ஸை முந்தி சென்றால் அதிசாரம்.
இதை எல்லாம் எப்படி கண்டு பிடித்தார்கள் நம் சித்தர்கள்?
ஆனால் அவர்கள் நமக்கு காட்டிய வழியை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.
அது போல்தான் செவ்வாய் தோஷம்.
பதிவு நீள்வதால் அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

No comments: